வெள்ளி, 14 ஜனவரி, 2011

சில வருத்தங்கள் ,,, சில நிகழ்வுகள் ...

      சிறிது நாட்களுக்கு எந்த இடுகையும் இல்லாமலே பகிர்வு என்ற திரையில் ஒளிந்திருந்தேன், காரணம் என் நலனில் அக்கறை உள்ளவரும், என் நண்பருமானவர், என் பதிவுகளை படித்துவிட்டு, உங்களுக்கு சில அதிகார மையங்களிலிருந்து மிரட்டலோ, அடியோ விழும் என கணித்து சொன்னார், நானும் சம்சயம் கொண்டவனாய் சில நாட்கள் தேமே என்று நிகழ்வுகளை கவனித்து வந்தேன்.

அவருக்கு தெரியாது போலும், இங்கே, கோடிகளை கொள்ளை அடிப்பவன் கூட சிரித்துக் கொண்டுதான் பேட்டி கொடுப்பானென்று, சிறு பிள்ளையை கழுத்தை நெறித்து பெட்டியில் அடைத்தவளுக்கு  அறுபதாயிரம் சம்பளமென்று, சக மனிதனை சாரயத்திற்க்காக கொள்பவர்கள் கூட உண்டென்று ,பதவிக்காக பெற்ற மகளை கூட வேசியாக்குவார்கள் என்று ...

மனம் கனக்கிறது ... சில விஷயங்களை ... நான் சுயம் இழந்தால் மட்டுமே வெளியிடமுடியுமென்று நன்றாக புரிகிறது ....

திரு.ஞானியின் பதிவை தயவு செய்து படியுங்கள் ... நேற்று புத்தக சந்தையில் ஞானியை அவரது ஞானபானு பதிப்பக ஸ்டாலில் பார்த்தேன் ... மிகுந்த நட்பு பெருகி மனம் நெகிழ்ந்ததால் பேசாமல் தனியே வந்து விட்டேன், அவரை பார்த்து கை குலுக்குவதோ, அவரின் செயல்களுக்கு பாராட்டு தெரிவிப்பதோ என்னை பொறுத்த வரை வேண்டாத வேலை,.. செய்கை மட்டுமே அவரின் எண்ணங்களுக்கு நான் செய்யும் பதிலாற்றுவதாக இருக்க முடியும் .. ஏனென்றால் இந்த இணைப்பில் உள்ள பதிவை படித்து விட்டு ... அவரின் வணக்கம் முகப்பை படியுங்கள் ... புரியும் ...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்……. « திண்ணை - ஞானி