வியாழன், 30 டிசம்பர், 2010

பகிர்வு -- நிகழ்வு

சாரு நிவேதிதா - ப்லோக்ளிருந்து......

எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் வெளியீட்டு விழா

ஜனவரி 1 ஆந்தேதி மாலை உயிர்மை பதிப்பகம் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துயில்நாவலின் வெளியீட்டு விழாவினை சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் நடத்துகிறது. நாவலைப் பற்றிய சிறப்பு விவாதம் ஒன்றும் நடக்கவிருக்கிறது.
முழுவிபரம்
உயிர்மை வெளியீட்டு அரங்கு: 5
எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்
நாள்: 1.1.2011 புத்தாண்டு தினம், நேரம்: மாலை 6 மணி,
இடம்: இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய்ய நூலகம், (LLA Building),
735, அண்ணா சாலை , சென்னை
துயில்
எஸ்.ராமகிருஷ்ணன்
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்
நாவல் அறிமுகம்: சித்ரா
தலைமை: இந்திரா பார்த்தசாரதி
முதல் பிரதி பெறுவோர்:
P.A. அசோக், அறநிலையத் துறை இணை இயக்குனர் கோவை
திருமூர்த்தி, அமெரிக்கா
சிறப்புரை:
நாவல் எனும் சஞ்சாரம்
எஸ்.ராமகிருஷ்ணன்
கலந்துரையாடல் அரங்கு:
டாக்டர் ருத்ரன்
தமிழவன்
.முருகேச பாண்டியன்
யுவன் சந்திரசேகர்

சிறப்பு அழைப்பாளர்கள்
இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி
இயக்குனர் முரளிஅப்பாஸ்
இயக்குனர் குமரவேல்
இயக்குனர் ஹோசிமின்
இயக்குனர் மணிகண்டன்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

படித்ததில் இனித்தது

இனி வரும் சில பதிவுகளில், நான் படித்து சிலாகித்த பல வலைபூக்களின் செய்திகளை பகிர்வேன், இதோ அன்பிற்குரிய நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது ... அதை பற்றிய பத்ரியின் - இடுகை (இணைப்பில்)


http://thoughtsintamil.blogspot.com/2010/12/2010.html

 

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

நான்(ம்) கையாலாகாதவன் (ர்கள்) ...



அவர்கள் நிதானமாய் பார்க்கிறார்கள்
நான் சுயம் குன்றித் திரும்பிக்கொள்கிறேன்...

அவர்கள் அழ முற்படுகிறார்கள்
நான் கவனமாய் கண் குறுக்கிக்கொள்கிறேன் ...

அவர்களுக்கு மெல்லிய விசும்பலுடன் கண்ணீர் ததும்புகிறது 
நான் வெற்று சமாதானங்களுடன் துடைக்க முயல்கிறேன் ...

கடைசி துளி உயிரையும் கூட்டி கதறுகையில் 
யாரையோ கைகாட்டி திட்டியபடி திரும்பி நடக்கிறேன் ...

புதன், 8 டிசம்பர், 2010

the stupid master: சாரு-வின் அழைப்பிதழ்

the stupid master: சாரு-வின் அழைப்பிதழ்: "அழைப்பிதழ் .... தேகம் December 8th, 2010தேகம் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு ஜனவரி முதல் தேதி டி.சி. புக்ஸ் நிறுவனத்தால் திருவனந..."

சாரு-வின் அழைப்பிதழ்

அழைப்பிதழ் .... 

தேகம்

தேகம் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு ஜனவரி முதல் தேதி டி.சி. புக்ஸ் நிறுவனத்தால் திருவனந்தபுரத்தில் வெளியிடப்படுகிறது. மொழிபெயர்ப்பு ப்ரஜானந்த்.  நேற்று ப்ரஜானந்த் கோவையிலிருந்து பேசினார். ப்ரஜானந்த் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அந்த நாவலில் செலின் காணாமல் போகும் இடத்தைப் படித்து அழுது விட்டதாகக் குறிப்பிட்டார். உண்மைதான்.  அப்படிக் கண்கலங்க வைக்கும் இடம்தான் அது.  மர்க்கி தெ சாத் தமிழில் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படி இருந்தது நாவல் என்றும் சொன்னார்.  சாதுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் சாத்-இன் எழுத்தைப் படித்து கண்ணீர் வராது.  தேகம் போன்ற ஒரு intense-ஆன எழுத்தை இதுவரை நான் எழுதியதில்லை.  இப்போது என் எழுத்தில் எனக்கு ஆகப் பிடித்த நாவல் எது என்று என்னைக் கேட்டால் தேகம் என்றுதான் சொல்லுவேன்.
முதலில் கூட்டமே வராது என்றார்கள்.  இப்போது ’கூட்டம் வரும்; ஆனால் அது கனிமொழிக்கும் குஷ்புவுக்கும் வரும் கூட்டம்’ என்கிறார்கள்.  இப்படிச் சொல்வது அவர்களின் மூடத்தனத்தையே காட்டுகிறது.  எப்படி என்றால், கேரளத்தில் பொதுவாக புத்தகங்களுக்கு வெளியீட்டு விழா நடத்துவதில்லை. அப்படி நடத்தாமலேயே அங்கே லட்சக் கணக்கில் விற்கின்றன.  இங்கேயோ கனிமொழிக்காக கூட்டம் வருகிறது; குஷ்புவுக்காக கூட்டம் வருகிறது என்று மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலைத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  பாவமாக இருக்கிறது. எழுத்தாளனை மதிக்காத சமூகம் என்பதற்கு இதைவிட உதாரணம்  வேறு வேண்டியதில்லை.  என்னுடைய ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த மதன் “இது என்ன புத்தக வெளியீட்டு விழாவா? அல்லது, ரஜினியின் முதல் காட்சியா?” என்று வியந்தார்.  அதையே இந்த மூடர்களுக்கு பதிலாகச் சொல்லுவேன்.
கூட்டம் முடிந்து வழக்கமாக காக்டெய்ல் பார்ட்டி இருக்கும்.  இந்த ஆண்டு இல்லை.  காரணம், சில பார்ட்டி ஸ்பாய்லர்கள் வந்து கெடுத்து விடுகிறார்கள்.  அதனால் இந்த ஆண்டு காக்டெய்ல் பார்ட்டி கிடையாது. கீழே மீண்டும் ஒரு அழைப்பு.
(வெளியீட்டு விழாவுக்கு வருபவர்கள் யாரும் அழைப்பிதழை எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை.  அனைவரும் வரலாம்…)
Dear friends,
It takes immense pleasure in inviting you to my book release function on 13th December 2010 at Kamarajar Arangam at 6:00 pm. Seven new books published by Uyirmmai Publications  are  being released in the event. The event will be honoured by esteemed guests which includes
Ms. Kanimozhi, MP
Mysskin
S. Ramakrishnan
Dr. Nalli Kuppusamy Chettiyar
A. Natarajan
Ravikumar MLA
Kushboo
Manushya Puthiran
Thamizhachi
Madan (Cartoonist)
I solicit your gracious presence on the occasion and request you to make it convenient to attend the function and make it a grand success.
I request you to kindly forward the Invitation online to our friends and well wishers.
Charu Nivedita
Address of the Venue :
Kamaraj Arangam
492, Anna Salai
Teynampet
Chennai
Comments are closed.