ஏங்கிக் கிடக்கையிலே
முதல் முத்தம் கொடுக்கையிலே
முயங்கிப் படுக்கையிலே
ஒரு துளியாய் நான் வந்தேன்
ஓங்காரமாகிப்புட்டேன்
என் தாயி கருக்குள்ளே
இருட்டு சிறைக்குள்ளே
எத்தனை நாள் மிதந்தேனோ
எனை மறந்து கிடந்தேனோ
கறுப்புக் குடங்குள்ளே
கருவழிஞ்சி போயிருந்தா
வரமோன்னு நினைச்சிருப்பேன்
வந்த வழி போயிருப்பேன்
உன் வயித்த கிழிச்சி என்னை
ஒத்தையிலே போட்டாலே
அந்த மருத்துவச்சி மண்டையிலே
மாடு ரெண்டும் முட்டுமோடி
தாய் பால குடிச்சிபுட்டு
தலைபுரண்டு கெடக்கயிலே
முலை பால முட்டி முட்டி
முங்கிக் குடிக்கையிலே
எனக்கேதும் தெரியாதே
என் தாயி இவதான்னு
சில நாள் பால் கொடுத்தே
பல நாள் பழம் கொடுத்தே
வெடுக்கென நிறுத்திபுட்டே
வெள்ளை சோறை நீட்டிபுட்டே
காசுன்ன தெரியாது
கடுகு வெலை கூட அறியாது
காலம் எனை கடக்கையிலே
காண்வென்டில் சேத்துப்புட்ட..
ஒன் , டு , த்ரீ - யும்
ஏ , பி , சி - யும்
ஏன்னே தெரியாம
ஏழு நாள் கத்திப்புட்டு
எனை மறந்து தூக்கத்துல
ஏதேதோ சொல்லி வைக்க
இங்கிலீசு பேசுறான் - எம்பையன்னு சொல்லிக்கிட்டு
ஏழூரு சொல்லிவச்ச, எனை வாரி முத்தம் வைச்ச ..
கருத்து தெரியும்முன்னே காலாண்டு பல கடந்தேன்
அரையாண்டு பரீட்ச்சை எல்லாம் அருவெறுப்பா எழுதிவச்சேன்
முழு ஆண்டு முடிப்பதற்குள் முழி பிதுங்கி போனதடி
பத்தாவது பாஸ் பண்ண பைத்தியம் தான் ஆனேனடி
கணக்கு சூத்திரமோ, காலனி ஆதிக்கமோ,
நியூட்டன் விதிகளோ, நியாண்டர்தால் மனிதனோ
புத்தகத்தில் உள்ளதெலாம் பொல பொல-னு குடிச்சிவச்சேன்
வந்தமர்ந்த தேர்வில் எல்லாம் வாந்தியாய் எடுத்து வச்சேன்
விலைவாசி தெரிஞ்சதில்லை
வீட்டு கஷ்டம் அறிஞ்சதில்ல
விளையாட்டா வாழ்க்கை போக ...
திடீர்னு வேலைக்கு போகச்சொன்ன !!!
நாலு ஊரு தேடி ஓடி
நாற்பது பேர் காலில் ஆடி
நானூறு சம்பளத்தில் நயமாக அமர்ந்துபுட்டேன் ...
நாளாக நாளாக நாய் பொழப்புன்னு தெரிஞ்சிகிட்டேன் ...
நான் படிச்ச ஒரு மயிரும்
நாய் பொழப்பில் உதவில்லையே
பட்டம் செஞ்சா பறக்க கூட
எம் பட்டம் உதவில்லையே
நானூறு சம்பளக்காரன் ,..
நல்லவன் என் புள்ளகாரன்
கல்யாணம் செஞ்சிவெக்க,,,,, ஆத்தா
காடு மேடா அலைஞ்சிபுட்டா...
மவராசி கல்யாணமும் பண்ணி வெச்சா...
கால் வயித்து கஞ்சியில வஞ்சி மக வயிராறி
பக்கம் வந்து படுத்திடுவா, இந்தப் பாவி மகன் முழிசிடுவான்..
வயித்துக்கு குறைஞ்சாலும், வயசுக்கு கொடுத்துபுட்டு
வந்த ஆறு மாசத்துல வயிறு முட்ட நின்னிடுவா ...
எமன் ஒருநாள் இறங்கி வந்து எங்கடானு எனை தேட
எம்புள்ள பொறந்திருப்பான், எனை பார்த்து சிரிச்சு நிப்பான்..
என்றோ என் பிள்ளை எழுது கோல் எடுத்து வச்சு
இந்தக் கவிதையின் முதல் வரியை கவனமா தொடர்ந்திடுவான் ....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக