சனி, 30 அக்டோபர், 2010

ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் - அழியா காவியம்

ஸ்டீவென் ஸ்பீல்பர்க்-இன் டினோசர் படங்களின் பிரமிப்பில் கடந்துவந்த  என் பதின் பருவம், அதன் மீதான க்ராபிக்ஸ் மோகத்தை இழக்கும் முன்னே, ஸ்பீல்பர்க் மீண்டும் அவரின் மாஸ்டர் பீஸ் மூலமாக என்னை நிரந்தர அடிமை ஆகிவிட்டார்.

 ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் - ஸ்பீல்பர்க்-இன் ஆகச்சிறந்த படைப்பு என்பதற்கு உலக அளவில் கிடைத்திருக்கும் வரவேற்பே சான்று ... 
ஒரு தனி மனிதனின் முட்டாள் தனம் வரலாற்று பக்கங்களில் அழிக்க முடியாத கரையை அந்நாட்டு மக்களுக்கு விட்டு செல்லும் என்பதற்கு ஜெர்மன் மக்களின் இப்போதைய குற்ற உணர்வும் அந்த முட்டாள் ஹிட்லருமே சாட்சி.
காதலையும்,காமத்தையும், பல கன்றாவிகளையும் கலந்து கொடுத்தே தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் நீர்த்துபோகச் செய்த நம் இயக்குனர்கள் இந்த படத்தை பார்த்தால் விட்டத்தில் தொங்குவார்கள் என்பது நிதர்சனம்,ஆனால் நம் ஆட்கள் இதிலிருந்தும் பல சீன்களை உருவிவிடுவார்கள் என்பது காணும் நிஜம்..
இக் காவியம் ஒரு போலிஷ் குடும்பத்தின் சப்பாத் பிராத்தனையோடு தொடங்குகிறது, கருப்பு வெள்ளையிலேயே பெரும்பான்மையாக எடுக்கப்பட்ட இப்படம் தேவையான இடங்களில் வண்ணங்களை கொண்டும் ஜாலம் செய்திருக்கிறார்கள்.
ஜெர்மனியின் நாஜிக்கள் போலிஷ்-ஐ தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்து அங்குள்ள யூதர்களை ஜெட்டோ-விற்கு அனுப்புகிறது இதனிடையில் ஷிண்ட்லெர்-ஆக வரும் ஒரு வியாபார நோக்கமுள்ள மனிதன் எப்படி இந்த யூதர்கள் பால் காதல் கொண்டு மனிதாபிமானி ஆகிறான் என்பதை பல இயற்கையான காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் அழகிய ஓவியமாக தீட்டியிருக்கிறார்கள்.
அன் நகரத்திற்கு ராணுவ அதிகாரியாக வருபவனின் மன ஓட்டத்தை ஒரே காட்சியில் புரியவைப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று.
ஒரு இனத்தின் மீதுள்ள ஒரே ஒரு நபரின் முட்டாள் தனமான வெறி எப்படி அந்நாட்டு மக்களிடம் பரவி ஒரு தேசத்தையே அழித்தது என்பதற்கு இப்படம் மற்றும் கதை உதாரணம்...
இன்றும் பல நாடுகளில் நடந்து வரும் இனப் போராட்டங்கள் சர்வாதிகாரமாக ஒடுக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பது இப்படம் மூலம் நன்கு விளங்கும்.
என்னதான் நான் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதினாலும் இப்படத்தை பார்த்து காட்சி இன்பத்தை அனுபவிப்பதற்கு நிகர் வேறேதுமில்லை, இந்த எழுத்துக்கள் அதற்கான ஆர்வத்தை உங்களுக்குள் விதைக்கவே அன்றி வேறெதற்குமில்லை ... 
ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் - நமது அருகாமையில் உள்ள DVD ஷாப்-களில் கிடைக்கிறது, இப்படத்தை பார்த்தால், நம் தமிழ் பட இயக்குனர்கள் மீது உங்களுக்கு வரும் கோவத்தையும் ஆத்திரத்தையும் எதை கொண்டும் அடக்கமுடியாது ... 
இப்படத்தின் trailer - ஐ காண கீழே கிளிக்கவும் ....
http://www.youtube.com/watch?v=TAH3RTRlCHY

புதன், 27 அக்டோபர், 2010

வேலுரை சூழ்ந்த தீவினை - துணை முதல்வரின் வருகை

பல வரலாற்று சிறப்பு மிக்க வேலுரை , மாநகராட்சியாக மாற்றி அழகு பார்த்தது இந்த நோக்கத்திற்க்காகதான் எனில் அந்த மானம்கெட்ட சிறப்பு நமக்கேன்...

மக்களை வெறும் ஓட்டு போடும் சாதனமாகவும், அதற்கு உயவாக டாஸ்மாக் திரவத்தையும் ஊற்றி தங்களின் சுய லாபத்துக்காக ஆட்டிவைப்பது ... திராவிட இயக்கங்களுக்கே உண்டான தனிக்கலை...

இவ்வகையான விமர்சனங்களால் .. நான் எந்த ஒரு கட்சிக்கும் உரியவனல்லவெனவும், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி என் கருத்துகளை இங்கேழுதவும் விரும்புவன் என்றும் தாங்களரிவீர்கள் என நம்புகிறேன்..

என்ன மாதிரியான சலுகைகளையும், எந்த மாதிரியான சிறப்பு மிக்க திட்டத்தையும் துவக்க துணை முதல்வர் இங்கே (வேலூர்) வந்தாரென்று நானறியேன் பராபரமே ... ஆனால் அந்த பயன்கள் அனைத்தும் பாழாய் போவது போல் இந்த மூன்று நாட்களும் இந்த ஊரையே படு நரகமாக்கிய பெருமை ஸ்டாலினுக்கு உண்டு ...

கருப்பு சிவப்பு கொடிகளும், வண்ண மயமான பேனர்களும் .. நடைபாதையை அடைத்ததுமிலாமல் ... வாகன போக்குவரத்தையே ஸ்தம்பிக்க செய்ததது .. ஒன்னரை மணிநேரமாகியும் ஒரே இடத்தில் புகை கக்கி கொண்டிருந்த வாகனங்களை பார்கையில் .. நம் நாட்டுக்கு முதல்வர்கள் வேண்டுமா என்பதையே யோசிக்க வைத்தது ...

சாலையோர கடைகளில் மாமுல் வாங்கும் காவலர்கள், இன்று மட்டும் ஏனோ அவைகளை அப்புறப்படுத்தியிருந்தார்கள். ஒரு தள்ளு வண்டி கடைக்காரியிடம் சீருடை அணிந்த அதிகாரி மாமுல் கேட்டதை கண்ணார கண்டிருக்கிறேன் ... நான் இந்நாட்டை பற்றி கவலை படுவதை விட அவர் வீட்டு பெண்களை பற்றியே கவலை கொண்டேன்... மனைவியை புணர்வதற்கும் இவர்கள் லஞ்சம் கேட்பார்கலென..

நல்ல திட்டங்களையும், மக்களை மேன்மக்களாக்கவும் செய்ய வேண்டிய கடமையை , ஊர் கூட்டி மைக் போட்டு அதை செய்தோம், இதை செய்தோம் என இவர்கள் அங்கலாய்ப்பது வியப்பையே கூட்டுகிறது...

இறுதியாக என் அன்புக்கினிய ஸ்டாலினுக்கு என் வேண்டுகோள், தயவு செய்து உங்கள் நல்ல திட்டங்களை அரசு எந்திரம் மூலமாக அமுல்படுத்துங்கள். உங்களின் ஆடம்பர வருகை ஒரு சாதாரணனுக்கு பயத்தையும், வெறுப்பையுமே ஏற்படுத்துகிறது.

மதுரை மக்கள் வீச்சரிவாளோடு திரிவார்கள் என்று நம்ப வைத்த சினிமாவையும், தங்கள் பலத்தை நிரூபிக்க மதுரையை கட்-அவுட்-களாலும், நாராசமான மேடை பேச்சுகளாலும் நிரப்பும் உங்களை போன்றவர்களும் சேர்ந்து எங்கள் வேலுரை மற்றுமொரு மதுரையாக மாற்றவேண்டாம்...

வியாழன், 21 அக்டோபர், 2010

குறும்படமும் .... குற்றங்களும் ....

மக்கள் தொலைகாட்சி தமிழகத்தின் குரல் என்றும் , தமிழரின் குரல் என்றும் ... பீற்றிக்கொண்டிருக்க... அதற்கு சப்பை கட்டு கட்டும் வேலையாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பா வண்ணம் தவம் கிடந்தார்கள்..

சமீபத்தில் சினிமா பாடல்களை பற்றியும் அதன் பாடகர்களுடனும் பேட்டி காணும் அன் பிளக் - நிகழ்சிகள் தொடங்கிவிட்டன ... மக்கள் தொலைக்காட்சிக்கு வந்தனம் .. ரஜினியையும் கமலையும் இவர்கள் படுத்திய பாடுகள் இனிமேல் திரையரங்கு இருட்டினுள் காணாமல்போகும் ...

நாட்டை ஆளும் இளைஞரின் பேரன்கள் கோடி கோடியாய் சினிமா எடுத்துகொண்டிருக்க .. இவர்களின் குடும்பம் மட்டும் தமிழ் மக்களைப்போல் இளிச்சவாயனா என்ன ? வெள்ளோட்டம் பார்க்க இதை விட வேறென்ன நல்ல நேரம் இருக்க முடியும் ...

ஆனால் மக்கள் தொலைகாட்சி , என் உள்ளம் கவர்ந்தவைகளில் ஒன்று .. அதன் ஆரம்ப கால கட்ட நிகழ்சிகளும், இன்றும் புதிதான முயற்சிகளும், என்னை வெகுவாக ஈர்க்கின்றன ... ஈரானிய மற்றும் ரஷிய மொழி திரைப்படங்கள், குறும்படங்களின் மதிப்பீடுகள், எட்டுக்கு எட்டு, உண்மை மற்றும் நாட்டுப்புற கலைகளை பற்றிய அதன் நிகழ்ச்சிகள் என்று அதன் வரிசை நீளும் ...

பிடிக்காத நிகழ்ச்சி எனில் "ஆசை"-யை முதலிடத்தில் வைக்கலாம், இவங்க கார் எடுத்துகுனு சேரிக்கு போவான்கலாம் .. அங்க இருக்கிற சேரி பையனுக்கு அன்னிக்கு பூரா மிட்டாய் வாங்கி தருவாங்களாம்... இவர்களின் இந்த தமிழ் நிகழ்ச்சியை விட என்ன கொடுமை இருக்க முடியும் .. "கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை",பின் எப்படி இவர்கள் ஏதுமறியாத அந்த குழந்தைகள் மனதில் ஏற்றத்தாழ்வை விதைக்கலாம்...?????

புதன், 20 அக்டோபர், 2010

விகசிப்பு ...

சில எதிர்பாராத நிகழ்வுகளின் மூலமாகத்தான் நாம் வாழ்கையின் நிலையாமையையும், அதன் தன்னிகரற்ற போக்கையும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்கை சிறு இமி கூட எதற்கும் உதவாதது என்பதும் நம் கன்னத்தில் அறைந்து சொல்லப்படும், ஆனால் எப்போதும் போல், உலகாயாதமான பாசாங்கு சமாதானங்கள் மூலமாக மீண்டும் அதே குட்டையில் மலங்க மலங்க மலம் அள்ளிக்கொண்டிருப்போம்...

மனித குல மேம்பாடு, சமத்துவ உரிமை,மனித நல்லினக்கணம், குல தாழ்ச்சி பாராமை,எல்லோரையும் தன்னுயிர் போல் நேசித்தல்.... இவை எல்லாம் எங்கோ படித்து போல் ஞாபகம் ...

எப்படி ஒரு மனிதன் தன் நாட்டினையும் , தன்னையும் உன்னதமாக்க என்று திரு, ஜெக்கியின் விடியோவை இணைப்பில் பார்க்கவும்...

உரையாடலின் கருத்து முகத்தில் அறைகிறது ....
சற்றே பெரிய படச்சுருள் ...

திங்கள், 18 அக்டோபர், 2010

சாருவும் நானும் ...

நான் ஒரு கத்துக்குட்டி என்பதால் . . . எப்படி இந்த ப்ளாக்-ஐ மிகவும் பிரபலமடைய செய்வது என்று யோசித்தேன், ஒன்று இபோதைக்கு ரஜினி ரேஞ்சில் இருக்கும் சாருவை வாழ்த்தவேண்டும் அல்லது வசைபாடவேண்டும், எதை செய்தலும் அவர் தன் ப்ளாக்-இல் வெளியிட்டு நம்மை பிரபலபடுத்திவிடுவார்,...

எனவே திரு.சாரு அவர்களே, தாங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியான தமிழ் திரைப்படவிழாவில் பங்கேற்று, நான் என் கோபத்தையும், குரூரத்தையும் கண்பிக்கப்போகிறேன்....

ஆமாம், இது என்ன திட்டா இல்லை வாழ்த்தா....
நன்று, இன்று, திரு.எஸ்ராவின், வலைப்பூவில் படித்த சிறிய கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, இலையை பற்றிய அந்த சிறிய இடுகை , ஒரு குறு நாவலுக்கான செய்தியை தன்னகத்தே கொண்டிருந்ததை என்னால் நன்குனரமுடிந்தது, என் சிறு வயதில் இலையை பற்றிய கவிதைகளை எழுதி என் ஆசிரியர்களிடம் கண்பித்து திட்டு வாங்கியது நினைவுக்கு வருகிறது.

செடியும், மரமும் அவற்றுக்கே உரிய கதைகளையும் , கவிதைகளையும் மௌனமாக பேசிக்கொள்கின்றன, வண்டுகளுக்கே மட்டும் கேட்கும் வகையில் அவை தன ரகசியங்களை முனுமுனுகிறது,.....

நீங்களே பாருங்கள் மேற்சொன்ன வகையில் கவிதை வரைந்து கொடுத்தல் யார்தான் திட்டமல் இருப்பார்கள்....

---- ஹி இஸ் எ மாஸ்டர் , பட் ஸ்டுபிட்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இன்று எனக்கு பிறந்த நாள்

அன்புடன் சிவம் எழுதும் இந்த தொல்லைகளை சற்றே பொறுத்து படிக்கவும்