மக்கள் தொலைகாட்சி தமிழகத்தின் குரல் என்றும் , தமிழரின் குரல் என்றும் ... பீற்றிக்கொண்டிருக்க... அதற்கு சப்பை கட்டு கட்டும் வேலையாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பா வண்ணம் தவம் கிடந்தார்கள்..
சமீபத்தில் சினிமா பாடல்களை பற்றியும் அதன் பாடகர்களுடனும் பேட்டி காணும் அன் பிளக் - நிகழ்சிகள் தொடங்கிவிட்டன ... மக்கள் தொலைக்காட்சிக்கு வந்தனம் .. ரஜினியையும் கமலையும் இவர்கள் படுத்திய பாடுகள் இனிமேல் திரையரங்கு இருட்டினுள் காணாமல்போகும் ...
நாட்டை ஆளும் இளைஞரின் பேரன்கள் கோடி கோடியாய் சினிமா எடுத்துகொண்டிருக்க .. இவர்களின் குடும்பம் மட்டும் தமிழ் மக்களைப்போல் இளிச்சவாயனா என்ன ? வெள்ளோட்டம் பார்க்க இதை விட வேறென்ன நல்ல நேரம் இருக்க முடியும் ...
ஆனால் மக்கள் தொலைகாட்சி , என் உள்ளம் கவர்ந்தவைகளில் ஒன்று .. அதன் ஆரம்ப கால கட்ட நிகழ்சிகளும், இன்றும் புதிதான முயற்சிகளும், என்னை வெகுவாக ஈர்க்கின்றன ... ஈரானிய மற்றும் ரஷிய மொழி திரைப்படங்கள், குறும்படங்களின் மதிப்பீடுகள், எட்டுக்கு எட்டு, உண்மை மற்றும் நாட்டுப்புற கலைகளை பற்றிய அதன் நிகழ்ச்சிகள் என்று அதன் வரிசை நீளும் ...
பிடிக்காத நிகழ்ச்சி எனில் "ஆசை"-யை முதலிடத்தில் வைக்கலாம், இவங்க கார் எடுத்துகுனு சேரிக்கு போவான்கலாம் .. அங்க இருக்கிற சேரி பையனுக்கு அன்னிக்கு பூரா மிட்டாய் வாங்கி தருவாங்களாம்... இவர்களின் இந்த தமிழ் நிகழ்ச்சியை விட என்ன கொடுமை இருக்க முடியும் .. "கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை",பின் எப்படி இவர்கள் ஏதுமறியாத அந்த குழந்தைகள் மனதில் ஏற்றத்தாழ்வை விதைக்கலாம்...?????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக