புதன், 27 அக்டோபர், 2010

வேலுரை சூழ்ந்த தீவினை - துணை முதல்வரின் வருகை

பல வரலாற்று சிறப்பு மிக்க வேலுரை , மாநகராட்சியாக மாற்றி அழகு பார்த்தது இந்த நோக்கத்திற்க்காகதான் எனில் அந்த மானம்கெட்ட சிறப்பு நமக்கேன்...

மக்களை வெறும் ஓட்டு போடும் சாதனமாகவும், அதற்கு உயவாக டாஸ்மாக் திரவத்தையும் ஊற்றி தங்களின் சுய லாபத்துக்காக ஆட்டிவைப்பது ... திராவிட இயக்கங்களுக்கே உண்டான தனிக்கலை...

இவ்வகையான விமர்சனங்களால் .. நான் எந்த ஒரு கட்சிக்கும் உரியவனல்லவெனவும், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி என் கருத்துகளை இங்கேழுதவும் விரும்புவன் என்றும் தாங்களரிவீர்கள் என நம்புகிறேன்..

என்ன மாதிரியான சலுகைகளையும், எந்த மாதிரியான சிறப்பு மிக்க திட்டத்தையும் துவக்க துணை முதல்வர் இங்கே (வேலூர்) வந்தாரென்று நானறியேன் பராபரமே ... ஆனால் அந்த பயன்கள் அனைத்தும் பாழாய் போவது போல் இந்த மூன்று நாட்களும் இந்த ஊரையே படு நரகமாக்கிய பெருமை ஸ்டாலினுக்கு உண்டு ...

கருப்பு சிவப்பு கொடிகளும், வண்ண மயமான பேனர்களும் .. நடைபாதையை அடைத்ததுமிலாமல் ... வாகன போக்குவரத்தையே ஸ்தம்பிக்க செய்ததது .. ஒன்னரை மணிநேரமாகியும் ஒரே இடத்தில் புகை கக்கி கொண்டிருந்த வாகனங்களை பார்கையில் .. நம் நாட்டுக்கு முதல்வர்கள் வேண்டுமா என்பதையே யோசிக்க வைத்தது ...

சாலையோர கடைகளில் மாமுல் வாங்கும் காவலர்கள், இன்று மட்டும் ஏனோ அவைகளை அப்புறப்படுத்தியிருந்தார்கள். ஒரு தள்ளு வண்டி கடைக்காரியிடம் சீருடை அணிந்த அதிகாரி மாமுல் கேட்டதை கண்ணார கண்டிருக்கிறேன் ... நான் இந்நாட்டை பற்றி கவலை படுவதை விட அவர் வீட்டு பெண்களை பற்றியே கவலை கொண்டேன்... மனைவியை புணர்வதற்கும் இவர்கள் லஞ்சம் கேட்பார்கலென..

நல்ல திட்டங்களையும், மக்களை மேன்மக்களாக்கவும் செய்ய வேண்டிய கடமையை , ஊர் கூட்டி மைக் போட்டு அதை செய்தோம், இதை செய்தோம் என இவர்கள் அங்கலாய்ப்பது வியப்பையே கூட்டுகிறது...

இறுதியாக என் அன்புக்கினிய ஸ்டாலினுக்கு என் வேண்டுகோள், தயவு செய்து உங்கள் நல்ல திட்டங்களை அரசு எந்திரம் மூலமாக அமுல்படுத்துங்கள். உங்களின் ஆடம்பர வருகை ஒரு சாதாரணனுக்கு பயத்தையும், வெறுப்பையுமே ஏற்படுத்துகிறது.

மதுரை மக்கள் வீச்சரிவாளோடு திரிவார்கள் என்று நம்ப வைத்த சினிமாவையும், தங்கள் பலத்தை நிரூபிக்க மதுரையை கட்-அவுட்-களாலும், நாராசமான மேடை பேச்சுகளாலும் நிரப்பும் உங்களை போன்றவர்களும் சேர்ந்து எங்கள் வேலுரை மற்றுமொரு மதுரையாக மாற்றவேண்டாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக